ஒருவரையொருவர் சாடுவதை விடுத்து பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துவோம்- DR.சத்திய பிரகாஷ்

Malaysia, News, Politics

 466 total views,  2 views today

உலு சிலாங்கூர்-

நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் தேர்தல் முடிவுகள் குறித்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து, வரவிருக்கும் 15ஆவது பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துமாறு ஹுலு சிலாங்கூர் தொகுதி பிகேஆர் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜா கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

“எந்தக் கட்சித் தேர்தலிலும் வெற்றி தோல்வி சகஜமானது. நாம், முன்னோக்கிச் செல்வதே  முக்கியமானது. அதை விடுத்து, ஒருவரையொருவர் நோக்கி விரல் நீட்டி சாடி கொள்ள வேண்டாம்..

” அற்ப காரணங்களுக்காக கட்சித் தேர்தல்களை ஒத்திவைக்கும் வேறு சில அரசியல் கட்சிகளைப் போலல்லாமல், GE க்கு முன்பாக கட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற கட்சியின் நிலைப்பாடு, PKR இன்னும் நிலையானது மற்றும் உறுதியானது என்பதை காட்டுகிறது.

“பிகேஆர் தேர்தலுக்குப் பிறகு, பொதுத் தேர்தலில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அது மிகவும் முக்கியமானது” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் கூறினார்.

Leave a Reply