
ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்
274 total views, 1 views today
கோலாலம்பூர்-
நாட்டை உலுக்கியுள்ள வெள்ளப் பேரிடரில் ஒருவரைக்கொருவர் குற்றஞ்சாட்டுவதை நிறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் வலியுறுத்தினார்.
1971ஆம் ஆண்டுக்கு பின்னர் பின்னர் மிகப் பெரிய வெள்ளப் பேரிடரை நாடு எதிர்கொண்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.