
பிரதமர் வீட்டில் பலர் கூடியதற்கு அறிவுரை வழங்காதது ஏன்? – ஃபாமி பட்சில்
394 total views, 1 views today
கோலாலம்பூர்-
கோவிட்-19 பரவல் தொற்று காரணமாக நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு அறிவுரை வழங்கிய சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ நோர் ஹிஷாம், பிரதமர் இல்லத்தில் பலர் ஒன்றுன் திரண்டபோது ஏன் அறிவுரை வழங்கவில்லை? என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாமி பட்சில் கேள்வி எழுப்பினார்.
கடந்த வாரம் பிரதமர் இல்லத்தில் பலர் திரண்டபோது இதுபோன்ற அறிவுரையை வழங்காதது ஏன்? நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க மட்டும்தான் அறிவுரை வழங்குவீர்களா? என்று ஃபாமி பட்சில் வினவினார்.