பேராவில் தேமு – பிஎச் ஆட்சி நீடிக்கும்
55 total views, 2 views today
ஈப்போ-
இத்தவணையின் இறுதி வரையிலும் பேரா மாநிலத்திலுள்ள பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி இடையிலான ஆட்சி நீடிக்கும் என்று மாநில மந்திரி பெசார் சராணி முகமட் தெரிவித்தார்.

மாநில ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் எதுவும் கிடையாது, மாநிலத்தில் 24 தொகுதிகளை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியும் 9 இடங்களை தேசிய முன்னணியும் கொண்டிருக்கிறது. ஆதலால் இக்கூட்டணியின் ஒத்துழைப்பு தவணை இறுதி வரை தொடரும் என்று அவர் சொன்னார்.