
மஇகாவின் பாரம்பரியத் தொகுதிகள் விட்டுக் கொடுக்கப்படலாம்- சரவணன்
320 total views, 1 views today
கோலாலம்பூர்-
தேசிய முன்னணி வெற்றி பெறுவதை முன்னிறுத்தி வெற்றி பெறக்கூடிய பிற கட்சிகளுக்கு மஇகாவின் பாரம்பரியத் தொகுதிகள் விட்டுக் கொடுக்கப்படலாம் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றி ஆட்சி அமைப்பதே தேசிய முன்னணியின் முதன்மை நோக்கமாகும். அதன் அடிப்படையில் கேமரன் மலை போன்று மஇகாவின் பாரம்பரியத் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பரிமாற்றம் செய்துக் கொள்ளப்படலாம் என்று அவர் சொன்னார்.