‘மலேசியாவின் எழுச்சி’- நம்பிக்கைக் கூட்டணியின் தமிழ் பேருரை

Malaysia, News, Politics

 295 total views,  1 views today

மம்பாங் டி அவான் –

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு நம்பிக்கைக் கூட்டணியின் எழுச்சிப் பேருரை நடத்தப்படவுள்ளது.

‘மலேசியாவின் எழுச்சி.ஒன்றிணைந்த நம்பிக்கை; நம்மால் முடியும்’ எனும் தலைப்பில் தமிழில் நடைபெறும் நம்பிக்கைக் கூட்ட ணியின் பேருரை வரும் 6ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பிஎம்சி கிளினிக், கம்பார் சென்ட்ரலில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிஎச் கூட்டணியைச் சேர்ந்த  மாலிம் நாவார் சட்டமன்ற வேட்பாளர் ஷாஷா வீரையா, கெராஞ்சி சட்டமன்ற வேட்பாளர் ஏஞ்சலின் கூஹாய் யென், சுங்கை சட்டமன்ற வேட்பாளர் அ.சிவநேசன், பத்துகாஜா வேட்பாளர் வீ.சிவகுமார், வழக்கறிஞர் மனோகரன் மாரிமுத்து, கம்பார் நாடாளுமன்ற வேட்பாளர் சோங் ஷெமின்,புந்தோங் சட்டமன்ற வேட்பாளர் துளசி மனோகரன ஆகியோர்  உரையாற்றவுள்ளனர்.

Leave a Reply