
வானிலை மோசமாக இருந்தால் மக்கள் வெளியேற்றப்படுவர்
242 total views, 2 views today
ஷா ஆலம்,
வானிலை மோசமாக இருந்தால் தாமான் ஶ்ரீ மூடா மக்கள் தத்தம் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவர். இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை வனிலை மோசமான நிலைக்கு வருமானால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வானிலை அறிக்கையை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். வானிலை மோசமடைந்தால் மக்கள் வெள்ள நிவாரண மையங்களுக்ககு அனுப்பி வைக்கப்படுவர் என்று ஷா ஆலம் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் பஹாருடின் தெரிவித்தார்.