
10,000 ஓட்டக்காரகளுடன் பேரா ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா!
276 total views, 1 views today
– குமரன் –
கோலாகங்சார் – 30-10-2022
பேரா மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு இங்குள்ள டத்தாரான் பவிலியனில் 10,000 பேருடன் மெது ஓட்டப் போட்டியில் அவர் கலந்து கொண்டார்.
அவருடன் இளவரரி ராஜா நஸிரா சஃப்யாவும் சுல்தானின் சகோதரி ராஜா யோங் சோஃபியாவும் கலந்து கொண்டனர்.
அந்த ஓட்டப் பந்தயத்தில் உள்நாட்டு வெளிநாட்டு ஓட்டக் காரர்கள் கலந்து கொண்டனர்.
15 கிமீ., 10 கிமீ. ஆகிய தூரங்களில் போட்டிக்காகவும் சிறப்பு வருகையாளர்களுக்கும் 2.5 கிமீ தூர வழித்தடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புறநகர் பகுதியில் இந்த ஓட்டப் போட்டி நடத்தப்பட்டதால், அந்த வழித்தடத்தில் பூர்வக் குடி மக்களின் சிறப்பு படைப்புகள், மூங்கில் நடனம், பலகாரங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.