
EPF கணக்கிலிருந்து வெ.10,000 மீட்டுக் கொள்ளலாம்- பிரதமர்
228 total views, 1 views today
கோலாலம்பூர்-
EPF எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்திலிருந்து அதன் உறுப்பினர்கள் வெ.10,000-ஐ மீட்டுக் கொள்ள அரசாங்கம் அனுமதி அளிப்பதாக பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
இந்த நிதியை மீட்டுக் கொள்வது தொடர்பில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் ஆய்வுகளையும் கோரிக்கைகளையும் அரசாங்கம் செவி சாய்த்துள்ளது.
பொருளாதாரம் பின்னடைவு, வருமானம் இழப்பு போன்ற காரணங்களால் மக்கள் இன்னமும் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதை உணர்ர்ந்து அரசாங்கம் இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் சொன்னார்.